காவல்துறை அதிகாரிகளுக்கு 4 நாட்களுக்கு விடுமுறை இல்லை – தலைமை இயக்குனர் விளக்கம்!
சென்னையில் தமிழக சட்டப்பேரவை காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இதில் காவல்துறை அதிகாரிகள் 7 ஆம் தேதியில் இருந்து 10ம் தேதி வரை விடுமுறை எடுக்க வேண்டாம் என காவல்துறையின் தலைமை இயக்குனர் சி.சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள்
காவலர்கள் அனைவரும் 24 மணி நேரமும் ஓய்வு இல்லாமல் உழைக்கின்றனர். கொரோனா காலகட்டத்தில் கூட மற்ற ஊழியர்களுக்கு ஓய்வு கிடைத்தது. ஆனால், காவலர்களுக்கும் மற்றும் துப்புரவு ஆய்வாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படாமல் இருந்தது. ஆகவே,தொடர் பணியால் காவல் துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர் மற்றும் உடல் நிலை பாதிப்பு, இறப்பு மற்றும் தற்கொலை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதனால் காவலர்கள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு தருமாறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
Exams Daily Mobile App Download
அதன்படி, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இந்த மாதத்திற்கான 9ஆம் தேதி,10ம் தேதி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதனால் காவல்துறையும் தீயணைப்புத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி – 600 கோடி ஒதுக்கீடு!
இதன் மூலம் ஒரு பகுதியாக தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சி.சைலேந்திரபாபு வியாழக்கிழமை ஒரு உத்தரவை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மே 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் யூனிட்டில் உள்ள அதிகாரிகள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் உயர் அதிகாரிகள் விடுமுறைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அறிவித்திருக்கிறார். மேலும் 9,10ம் தேதிகளில் அதிகாரிகள் அலுவலர்கள் என அனைவரும் தங்களது அலுவலகங்களில் காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.