போக்குவரத்து விதியை மீறிய பெண்ணின் ஓட்டுநர் உரிமம் ரத்து? காவல்துறை பரிந்துரை!!
தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் மக்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், பெண் ஒருவர் தலைக்கவசம் அணியாமலும் மற்றும் போக்குவரத்து விதியை மீறியதால் அவரின் ஓட்டுநர் உரிமைத்தை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறை பரிந்துரைத்துள்ளனர்.
போக்குவரத்து விதிமுறை:
தமிழகத்தில் பெருகி வரும் தனிநபர் வாகனங்களால் அவ்வப்போது ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் விபத்துகளை தடுப்பதற்கு சாலை போக்குவரத்து விதிகளை தமிழக அரசு கடுமையாக்கியுள்ளது. அந்த வகையில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் உட்பட தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த விதிமுறையை மீறி செயல்படுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நெல்லையில் பெண் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறி தலைக்கவசம் அணியாமலும் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தை ஓட்டியுள்ளார். அதனால் விதியை மீறி செயல்பட்ட பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறை பரிந்துரைத்துள்ளனர்.
இந்திய நீதிமன்றங்களில் 5ஜி இணைய சேவை – மத்திய அமைச்சர் தகவல்!
மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இது தொடர்பான பரிந்துரையையும் காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது போக்குவரத்து விதிமுறைகள் தமிழகத்தில் கடுமையாக்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.