விடிய விடிய விற்பனை கூடங்கள் செயல்பட அனுமதி – தீபாவளி ஸ்பெஷல்!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அரசு பண்டிகைக்கான அனைத்து முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாநகரில் தீபாவளியை ஒட்டி கடைகளுக்கு காவல்துறையினர் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
காவல்துறை அனுமதி:
தமிழகத்தில் வழக்கமாக விற்பனை கூடங்கள் இரவில் எத்தனை மணி வரை செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை அரசு வெளியிட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஏற்ற வகையில் கடைகள் செயல்படுவதற்கான நேரங்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட தமிழக அரசு மதுரை மாவட்டத்தில் உள்ள விற்பனை கூடங்கள் இரவு முழுவதும் செயல்படுவதற்கான அனுமதியை அளித்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இது போன்று குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் செயல்பட உள்ள கடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது. நிறுவனங்கள் அவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக தீபாவளி பண்டிகை பல கட்டுப்பாடுகளுடன் தான் அனுசரிக்கப்பட்டது.
பொங்கல் பரிசில் மாற்றம் – வெளியான அசத்தல் அறிவிப்பு.. ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி!
Exams Daily Mobile App Download
நடப்பு ஆண்டில் தான் கொரோனாவின் அச்சம் நீங்கி உள்ளது. இதனால் தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், மக்களின் வசதிக்காக கோவை நகரில், தீபாவளி காரணமாக இரவு 1 மணி வரையிலும் அனைத்து விற்பனை கூடங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொருட்களை வாங்கி விட்டு, மக்கள் வீடு திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் 1 மணி வரை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்