கேரள பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்த தடை!!

0
கேரள பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு - இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்த தடை!!
கேரள பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு - இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்த தடை!!
கேரள பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு – இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்த தடை!!

கேரள பள்ளிகளில் மாணவர்களின் ஆளுமையை கெடுக்கும் வார்த்தைகளை ஆசிரியர் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை:

கேரளா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார், மேடம் என்று அழைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்களிடையே பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தல்!

Follow our Instagram for more Latest Updates

மேலும் மாணவர்கள் ஆசிரியர்களை பாகுபாடின்றி டீச்சர் என்றே அழைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசும் போது தவறான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்கள் போடா, போடி என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

இது மாணவர்களின் மனநிலையை வெகுவாக பாதிக்கிறது. அதனால் ஆசிரியர்கள் பள்ளிகளில் “போடா, போடி” என்ற வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது திருவனந்தபுரத்தில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு படிப்படியாக மாநிலத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!