நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமரின் அதிரடி முடிவு?
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அந்நாட்டு பிரதமர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அண்டை நாடான சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியது. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. அதனால் உலக நாடுகள் கொரோனாவால் கடும் சவாலை சந்தித்தது. இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்து டெல்டா, ஓமிக்ரான் மற்றும் BA 2 என புதிய வைரஸ் அதிக வீரியத்துடன் பரவ தொடங்கியது.
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாட்டு அரசுகள் உலக சுகாதாரத்துறையின் உத்தரவிற்கிணங்க ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அடுத்து தடுப்பு பணியின் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மற்ற நாடுகளை தொடர்ந்து ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 1,679 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
நேற்று 1,245 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது, தினசரி பாதிப்பு, 1,679 ஆக அதிகரித்துள்ளது. அதனால் இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. குளிர் காலத்தில் சுமார் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருபதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஊரடங்கு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.