பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை!!
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் குறைந்து வருவதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாட உள்ளார். இந்த நிகழ்வானது இன்று (ஜூன் 7) மாலை 5 மணியளவில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மோடி உரையாடல்
நாடு முழுவதும் கொரோனா பரவலின் வேகமானது தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தினசரி கொரோனா பாதிப்பானது 4 லட்சம் வரை பதிவு செய்யப்பட்டு வந்தது. இம்முறை நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்படாது எனவும், ஒரு வேளை கொரோனா பாதிப்பு கை மீறக்கூடிய அளவுக்கு சென்றால் மட்டுமே ஊரடங்கு என்பது இறுதி ஆயுதம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
உங்கள் இன்சூரன்ஸ் பாலிசி, பான் கார்டு தொலைந்து விட்டதா? பெற்றுக்கொள்ள எளிய வழிமுறை இதோ!!
அந்த வகையில் மத்திய அரசின் ஆலோசனையுடன், பல மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு கொரோனா பாதிப்பானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தவிர மாநிலங்கள் தோறும் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அதிகளவு ஈடுபாடு செலுத்தி வந்த மத்திய அரசு, அதில் வெற்றியும் கண்டுள்ளது. இவற்றின் மூலமாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது 1 லட்சமாக குறைந்து தினசரி பதிவு செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கொரோனா 2 ஆம் அலைக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுடன் இன்று (ஜூன் 7) உரை நிகழ்த்த உள்ளார். இதற்கிடையில் மாநிலங்கள் தோறும் தற்போதுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நீட்டிப்பு, CBSE பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாகவும் பிரதமர் உரையில் தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வானது மாலை 5 மணியளவில் நடைபெறும் என அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.