இந்தியாவில் ரூ.100 லட்சம் கோடியில் புதிய வேலைவாய்ப்புகள் – பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரை!
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களிடையே உரையாற்றி வரும் பிரதமர் மோடி, பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் கீழ் சுமார் ரூ.100 லட்சம் கோடி செலவில் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதி தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்புகள்
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆவது ஆண்டை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். இதையடுத்து நாட்டு மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அவர் மக்களிடம் உரையாற்றும் போது பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 493 பேர் உயிரிழப்பு – புதிதாக 36,083 பேருக்கு கொரோனா தொற்று!
அந்த வகையில் நாடு முழுவதும் ‘பிரதான் மந்திரி கதிசக்தி திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு, நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.100 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்த புதிய திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை சர்வதேச அளவில் உயர்த்தவும், எதிர்கால தேவைகளுக்காக பொருளாதார மண்டலங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஹேமா & லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான், உண்மையை உடைத்த சௌந்தர்யா – அதிர்ச்சியில் பாரதி!
அதாவது கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 800 கோடி டாலர் மதிப்பில் மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது 300 கோடி டாலர் அலவில் மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனுடன் இந்தியாவின் முதுகெலும்பாக திகழும் விவசாய பணியை செய்பவர்கள் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தால், அவர்கள் மீது அரசு கவனம் செலுத்துகிறது. கிராமங்களை டிஜிட்டல் மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் ’75 வந்தே பாரத் ரயில்கள்’ சேவை விரிவுபடுத்தப்படும்.
75வது சுதந்திர தினம் – கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் முக ஸ்டாலின், ஓய்வூதியம் அதிகரிப்பு!
இதனுடன் மியான்மர், வங்கதேசம், தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கும் ரயில் போக்குவரத்துக்கு துவங்கப்படும். மேலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்படும். இந்தியாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே பாலம் அமைக்கப்படும். ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 4.5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வாயால வடை சுடுவதில் மோடி கில்லாடி