இந்திய விளையாட்டுத் துறையில் வாய்ப்புகள் – பிரதமர் மோடி தகவல்!!
விளையாட்டு வீரர்கள் தங்களது துறைகளில் சாதிப்பதற்கான வாய்ப்புகள், இந்தியாவில் பெருகி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சன்சத் கேல் மகாகும்ப் என்ற விளையாட்டு விழாவின் அறிமுக கூட்டத்தில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
விளையாட்டு வாய்ப்புகள்
இந்தியாவில் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் விளையாட்டுத் துறைக்கு கொடுக்கப்படவில்லை என்பது பலரது ஒருமித்த கருத்தாக இருக்கிறது. அந்த வகையில், விளையாட்டு என்பது கல்விக்கு அடுத்தபடியாக வைத்து பார்க்கக்கூடிய சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. இத்தகைய சூழலில், இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சாதிக்க விரும்புபவர்கள் உயரம் அடைவதற்கான வாய்ப்புகள் முன்பை விட தற்போது அதிகரித்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்கு ஷாக் – 11,000 பேர் பணிநீக்கம்!!
Follow our Instagram for more Latest Updates
அதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சன்சத் கேல் மகாகும்ப் நிகழ்வை துவக்கி வைத்த பிரதமர், உள்ளூர் வீரர்களுக்கு இந்திய விளையாட்டுத் துறையில் வாய்ப்புகள் பெருகி இருப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்திய விளையாட்டு துறை வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக வளர்ந்து இருப்பதாகவும், வீரர்கள் முறையான பயிற்சியுடன் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.