3 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை – கொரோனா பரவல் எதிரொலி!!
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 3 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
பிரதமர் ஆலோசனை:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளில் மட்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 4 லட்சமாக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது. பல மாநிலங்களில் இடுகாடுகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று பிரதமர் அறிவித்துள்ளார். அதனால் மாநிலங்களில் உள்ள தொற்று நிலையைப் பொறுத்து, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
SSC தேர்வுகள் 2021 ஒத்திவைப்பு !!!
இருப்பினும் பிரதமர் கொரோனா பரவல் குறித்து தினமும் மாநில முதல்வர்களுடனும், மத்திய அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல், இன்றும் தொற்று பரவல் குறித்தும், கட்டுப்படுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மணிப்பூர், திரிபுரா, சிக்கிம் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்