மீண்டும் முழு ஊரடங்கு? இன்று மாலை பிரதமர் தலைமையில் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் அச்சம்!

0
மீண்டும் முழு ஊரடங்கு? இன்று மாலை பிரதமர் தலைமையில் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் அச்சம்!
மீண்டும் முழு ஊரடங்கு? இன்று மாலை பிரதமர் தலைமையில் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் அச்சம்!
மீண்டும் முழு ஊரடங்கு? இன்று மாலை பிரதமர் தலைமையில் ஆலோசனை! ஓமைக்ரான் பரவல் அச்சம்!

நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.

ஆலோசனை கூட்டம்:

தென் ஆப்பிரிக்க நாட்டில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் ஓமைக்ரான் வகை தொற்று தற்போது உலகம் முழுவதும் உள்ள 89 நாடுகளில் பரவி விட்டது. சில நாட்களுக்கு முன்பு வரை இந்தியாவில் ஓமைக்ரான் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 1 ஆக மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 226 பேருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் டெல்லியில் 57 பேருக்கும், மகாராஷ்டிராவில் 57 பேருக்கும், தெலங்கானாவில் 24 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும், கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 பேருக்கும் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மொபைல் நம்பர் அப்டேட் செய்யும் முறைகள் இதோ!

சமீப நாட்களில் டெல்லியில் அதிக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. புதிய பதிவானது இதுவரை 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையில் உள்ளது. அதிகம் நோய்த்தொற்று பரவி வருவதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 34 பேருக்கு புதிய வகை ஓமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post Office இன் சிறந்த சேமிப்பு திட்டம் – ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

இதனால் தமிழகம் நாட்டிலேயே அதிக ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது நாடு முழுவதும் அதிக அளவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதால் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. முன்னதாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அளிக்கப்பட்ட தளர்வுகள் மேலும், தீவிரமாக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!