PM கிசான் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும் திட்டமாக பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்தின் கீழே ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது குறித்து முழு விவரத்தையும் கீழே இந்த தொகுப்பில் பார்ப்போம்.
பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டம்:
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக அரசு விவசாயிகளுக்கு பல நன்மையான திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இது தவிர மத்திய அரசும் தொடர்ந்து விவசாயிகளுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது. மேலும் பல்வேறு நிதியுதவி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே விவசாயிகளின் போராட்டங்களின் விளைவாக வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு!
மத்திய அரசின் பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டம் நாடு முழுவதும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாய குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதற்காக செயலில் இருந்து வருகிறது. மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணம் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வருடந்தோறும் 3 முறை தவணையாக 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மத்திய அரசின் இந்த திட்டத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 11 வது தவணை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தவணை ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்குள் வரும் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதற்கு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இ-கேஒய்சி கட்டாயம் என்றும், தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிஎஸ்சி சேவை மையங்களை தொடர்பு கொண்டு பயோமெட்ரிக் பதிவை செய்து கொள்ளுமாறு பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்ட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை செய்யாமல் இருந்தால் பணம் வராது என்றும் தெரிவித்து உள்ளனர். இது குறித்து விளக்கங்களை தெரிந்து கொள்ள https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என்றும் கூறியுள்ளனர்.