PM KISAN திட்ட பயனாளிகளுக்கு 3 நாட்களில் ரூ.2000 தவணைத்தொகை கிடைக்குமா? முழு விபரம் இதோ!
பிரதான் மந்திரி கிசான் நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல் ஓன்று வெளியாகி இருக்கிறது. அதாவது மே 31 ஆம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 வது தவணை செலுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
ரூ.2000 தவணைத்தொகை:
மத்திய அரசு, விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி, 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. மேலும் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே தலா 2000 ரூபாய் வீதம் தவணை நிதி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் 11வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – 15 மணிநேரம் காத்திருப்பு!
மேலும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் தொடர்ந்து நிதியுதவி பெற, e-KYC செய்ய வேண்டியது கட்டாயம். அதற்கான காலக்கெடுவையும் மத்திய அரசு மே 31 வரை நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் 10-வது தவணை நிதி செலுத்தப்பட்டது. அதற்கான நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். இந்நிலையில் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 11 வது தவணை நிதியை பெறுவதற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த வகையில் விவசாயிகளுக்கு உதவித்தொகை எப்போது வழங்கப்படும் என்கிற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
Exams Daily Mobile App Download
கடந்த ஆண்டு மே 14 ஆம் தேதி தவணைத் தொகை செலுத்தப்பட்டதால், இந்த ஆண்டும் அதே தேதியில் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. இந்நிலையில் 11வது தவணையை மே 31ம் தேதி பிரதமர் மோடி வெளியிடுவார் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த தகவல் நிதியுதவிக்காக காத்திருக்கும் விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.