மத்திய அரசின் PM KISAN திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் நிதி – முக்கிய அப்டேட் இதோ!

0
மத்திய அரசின் PM KISAN திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் நிதி - முக்கிய அப்டேட் இதோ!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் நிதி - முக்கிய அப்டேட் இதோ!
மத்திய அரசின் PM KISAN திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் நிதி – முக்கிய அப்டேட் இதோ!

இந்தியாவில் விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 11வது தவணை விரைவில் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உங்களது தவணைத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதை எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

கிசான் தவணைத்தொகை:

இந்தியாவில் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் சன்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் விவசாயத்திற்கான இடு பொருளை வாங்க உதவும் பொருட்டு ஒரு வருடத்திற்கு 3 தவணைகளாக 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் தகுதியுடைய விவசாயிகளுக்கு 2000 ரூபாய் நிதி அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நிதி உதவி பெற சில நிபந்தனைகள் உள்ளது. அதன் படி 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகள் பயன்பெற முடியும்.

தமிழகத்தில் ஓய்வூதியர்களுக்கு 14% அகவிலைப்படி? அரசுக்கு வலியுறுத்தல்!

மேலும் மத்திய , மாநில அரசு ஊழியர்கள் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் போன்றோர் பயன் பெற இயலாது. இதுவரை பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் 10 தவணை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 11வது தவணை தொகைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த தவணை தொகையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் கேஒய்சி செயல்முறைகளை செய்ய வேண்டியதும் அதன் விவரங்களை புதுப்பிப்பது அவசியமாகும். பிரதம மந்திரி கிசான் சன்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பணம் உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆன்லைன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

கிசான் தவணை தொகை தெரிந்து கொள்ளும் முறைகள்:
  • https://fw.pmkisan.gov.in/BeneficiaryStatus/BeneficiaryStatus.aspx என்ற இணையபக்கத்திற்குச் செல்லவும்.
  • அதில் ஓப்பனாகும் முதல் திரையில் கேட்கப்படும் உங்களை பற்றிய விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • அடுத்ததாக திரையில் ஆதார் எண், மொபைல் எண், வங்கி கணக்கு எண் போன்றவற்றை சரியாக நிரப்ப வேண்டும்.
  • பின்னர் நீங்கள் ஆதார், மொபைல், கணக்கு எண் ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு வங்கிக் கணக்கில் கிசான் தொகை டெபாசிட் செய்யப்படுகிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!