PM கிசான் திட்டம் .. விவசாயிகளுக்கு ரூ. 6000 தவணைத்தொகை – அரசின் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் கிசான் திட்டத்தின் விவசாயிகளுக்கு கீழ் ரூ. 2000 வீதம் ஒரு நிதியாண்டில் ரூ. 6000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்மையில் 12ம் தவணை பெற்ற விவசாயிகள் பணத்தை திருப்பி தரும் படி அரசு தெரிவித்துள்ளது.
கிசான்:
இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் 2018 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 கட்டமாக மொத்தம் ரூபாய் 6,000 நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் நிதி பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. இதுவரை 12 தவணைத்தொகைகள் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பீஹார் மாநிலத்தின் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள் பணம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது வருமான வரி செலுத்தக்கூடிய விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. கிசான் திட்ட நிபந்தனையின் படி வருமான வரி செலுத்துபவர்கள் கிசான் திட்டத்தின் கீழ் தவணைத்தொகை பெற தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள்.
Follow our Instagram for more Latest Updates
இவர்களுக்கு தவறுதலாக பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. அதனால் வருமான வரி செலுத்தக்கூடிய விவசாயிகள் தங்களின் பணத்தை திருப்பி செலுத்தும் படி அரசு தெரிவித்துள்ளது. மேலும் தவறுதலாக தவணைத்தொகை பெற்ற பிற தகுதியில்லாத விவசாயிகளும் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்தும் விவசாயிகள்40903138323, IFSC: SBIN0006379 என்ற வங்கி கணக்கிலும் பிற தகுதியில்லாதவர்கள் 4090314046, IFSC: SBIN0006379 என்ற வங்கி எண்ணிற்கும் பணத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது