ரூ. 15 லட்சம் அளிக்கும் மத்திய அரசின் சூப்பர் திட்டம் – நீங்களும் பயனடைய வேண்டுமா? முழு விவரம் இதோ!
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தியும், பழைய திட்டங்களின் விதிகளை மாற்றியும் வருகிறது. தற்போது PM Kisan FPO யோஜனா திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் திட்டம்:
இந்தியாவில் விவசாய தொழிலுக்கும், அதனை வாழ்வாக நினைத்து செயல்படும் விவசாயிகளுக்கும் நன்மை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி, விவசாயிகளுக்கான ஓய்வூதியம் போன்ற பல சலுகைகளை அளித்து வருகிறது. மேலும், விவசாயிகள் தங்கள் விவசாய தொழிலை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் PM Kisan FPO யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த திட்டத்தின் கீழ் இந்திய குடிமகனாக உள்ள சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இயந்திரங்கள் போன்றவற்றை வாங்கி கொள்ளலாம். இதற்காக விவசாய சங்கத்தில் உறுப்பினராக, பதிவு செய்யப்பட்டு உள்ள விவசாயிகள் குழுவில் இருக்க வேண்டும். இந்த குழுவில் 11 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் அனுமதி பெறாமல் சிலைகளை வைக்கக்கூடாது – மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!
Exams Daily Mobile App Download
இந்த தொகையை பெறுவதற்காக விவசாயிகள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, முகவரிச் சான்று, வருமானச் சான்றிதழ், நில ஆவணங்கள், ஆதார் இணைப்பு மொபைல் எண், வங்கி பாஸ்புக் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். PM Kisan FPO திட்டத்தில் இணைந்து பயனடைய www.enam.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.