PM கிசான் 11 வது தவணைதொகை மே 31ம் தேதி முதல் வழங்கல் – விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

0
PM கிசான் 11 வது தவணைதொகை மே 31ம் தேதி முதல் வழங்கல் - விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!
PM கிசான் 11 வது தவணைதொகை மே 31ம் தேதி முதல் வழங்கல் - விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!
PM கிசான் 11 வது தவணைதொகை மே 31ம் தேதி முதல் வழங்கல் – விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11வது தவணைதொகையினை மே 31ம் தேதிக்குள் விவசாயிகளின் கணக்கில் செலுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

PM கிசான் திட்டம்:

பிரதமர் கிசான் யோஜனாவின் 11வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நல்ல செய்தி அளிக்கும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 11வது தவணையை வெளியிடும் தேதியை அறிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தோமர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தவணையான ரூ.2,000 ஐ 2022 மே 31 அன்று விவசாயிகளுக்கு வழங்குவார் என்று தோமர் கூறினார்.

Exams Daily Mobile App Download

கடைசி தவணை ஜனவரி 1, 2022 அன்று பிரதமர் மோடியால் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தில், அனைத்து பயனாளிகளும் தங்கள் eKYC ஐ புதுப்பிக்க வேண்டும் என்று தோமர் தெளிவுபடுத்தினார். eKYC புதுப்பிக்கப்படவில்லை என்றால், மே 31 க்கு முன் அதைச் செய்ய வேண்டும் என்றும், அல்லது பணம் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM கிசான் 2022 பட்டியலை சரிபார்க்கும் முறை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • முதலில், நீங்கள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்
  • முகப்புப் பக்கத்தில் ‘ஃபார்மர்ஸ் கார்னர்‘ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர் பயனாளிகள் பட்டியல் இணைப்பை கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத் தகவல்களை இங்கே உள்ளிட வேண்டும்.
  • கடைசியாக, ‘Get Report’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் மற்றும் பட்டியல் திரையில் தோன்றும்.

PM கிசான் பதிவு செய்யும் முறை:

  • விவசாயிகள் பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் பதிவு செய்யலாம்.
  • ஆன்லைன் பதிவுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘ஃபார்மர்ஸ் கார்னர்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இதற்குப் பிறகு, ‘புதிய விவசாயி பதிவு’ தாவலைக் கிளிக் செய்யவும்.
  • பின்னர் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • அதன் பிறகு உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும்.
  • இப்பொழுது வரும் படிவத்தில், உங்களின் விவரங்கள் அனைத்தும் கேட்கப்படும். அவற்றை நிரப்ப வேண்டும்.
  • இப்போது உங்கள் வங்கி கணக்கு மற்றும் பான் எண் தொடர்பான தகவல்களை உள்ளிடவும்.
  • பின்னர் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

தமிழகத்தில் குரங்கு அம்மை வைரஸ் பரவலா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

ஆஃப்லைனில் பதிவு செய்ய, நீங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று, அனைத்து விவரங்களையும் அளித்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!