PM கேர்ஸ் குழந்தைகளுக்கான நலத்திட்டம் – ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை!
இந்தியாவில் கொரோனாவால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான குழந்தைகள் தங்களின் பெற்றோரை இழந்துள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இவர்களுக்கென்று நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது PM கேர்ஸ் திட்டத்தை பற்றி பார்ப்போம்.
உதவித்தொகை
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளும் தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து மேலும் வீரியமிக்கதாக பரவத் தொடங்கும். அத்துடன் உலக சுகாதார நிறுவனம் 11.03.2020 முதல் 28.02.2022 வரை “கோவிட் பெருந்தொற்று காலம்” என்று அறிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மிகவும் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையை அடைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் இவர்களுக்கு உதவி புரியும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக கொரோனாவால் தங்களின் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கென்று பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் PM கேர்ஸ் குழந்தைகளுக்கான நலத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதில் தாய் மற்றும் தந்தை என பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் பயன் பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் இணைய தங்களின் பெற்றோரை இழந்த தருணத்தில் 18 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே இணைய முடியும்.
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஓய்வூதியம் வழங்க உத்தரவு!
இந்த திட்டத்தின் கீழ் இணையும் பயனாளிகளின் பெயரில் வைப்பு நிதி தொடங்கப்படும். அத்துடன் பயனாளிகளுக்கு 1 முதல் 10ம் வகுப்பு வரை இலவசமாக கல்வி வழங்கப்படும். அத்துடன் 18 வயதிற்கு மேல் இவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, மருத்துவ உதவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் பயனாளிகளின் வயது 23-ஐ எட்டும் போது அவர்களுக்கு ரூ.10,00,000 வரை வழங்கப்படுகிறது. இது பயனாளியின் அஞ்சல் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகை அவர்களின் எதிர்கால செலவினங்களுக்கு பேருதவியாக இருக்கும்.