8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை – கொரோனா பரவல்!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று பிரதமர் மோடி 8 மாநில முதல்வர்களுடன் இன்று காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிரதமர் ஆலோசனை:
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல மாநிலங்களில் கொரோனாவை தடுக்க பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு? அரசுக்கு கோரிக்கை!
இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு முற்றிலுமாக நீட்டிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த 8 மாநிலங்களில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வருவதால் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி செலுத்துதல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
TN Job “FB Group” Join Now
தென்கிழக்கு மாநிலங்களான அசாம், நாகலாந்து, திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்தாலும் கொரோனா மூன்றாம் அலை தாக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய முறைகள் குறித்து பிரதமர் அறிவுறுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத மாநிலங்களாக அவைகளை மாற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.