தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2ம் கட்ட மாதிரித்தேர்வு – முக்கிய முடிவு!!
திருப்பூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் கற்றல் திறன் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு மாதிரி தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து 9 முதல் 11ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. சில பள்ளிகளில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகிறது. முன்னதாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாதம் 3ஆம் தேதி துவங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
N Job “FB Group” Join Now
இதன்படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கருத்தில் கொண்டு கற்றல் திறன் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதன்படி மாணவர்களுக்கான முதல் கட்ட மாதிரித்தேர்வுகள் கடந்த 16, 17,18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் 20 ரூபாய் கட்டணத்தில் புதிய ரேஷன் கார்டு – எளிய வழிமுறைகள்!!
இரண்டாம் கட்ட மாதிரித் தேர்வுகள் மார்ச் 26ல் துவங்கி ஏப்ரல் 1 வரை நடக்கிறது. இது குறித்து கல்வி அதிகாரிகள் தெரிவித்த போது, மாணவர்களின் கல்வி எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. முதல் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினர்.