பிளஸ் 2 மாணவர்கள் அதிர்ச்சி..! – கணக்கு தேர்வில் பாஸ் ஆகுறதே கஷ்டம்
தமிழகத்தில் நடைபெற்று வரும் +2 பொது தேர்வுகளில் முக்கிய பாடங்களான கணிதம் மற்றும் ஆங்கிலம் தேர்வுகள் போட்டித்தேர்வு அளவிற்கு கடினமாக இருந்ததால் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
+2 பொது தேர்வு..!
+2 மாணவர்களுக்கு மார்ச் 2 ல் பொது தேர்வு தொடங்கி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் நாள் தேர்வான தமிழ் மற்றும் மொழி பாடங்களில் வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அதற்கு பின்னர் நடந்த தேர்வுகளான கணிதம் மற்றும் ஆங்கில தேர்வுகள் மிக கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். +2 ல் முக்கியமான தேர்வுகள் கடினமாக இருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இனிவரும் வேதியியல், உயிரியல், இயற்பியல், பொருளியல் போன்ற தேர்வுகள் எப்படி இருக்குமோ என மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |