தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் – இன்று முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்கள் ஒருங்கிணைப்பு பணிகள் இன்று (08-04-2021) முதல் துவங்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தேர்வுப் பணிகள்:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாதம் 3 ஆம் தேதி முதல் துவங்கி 21 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த பொதுத்தேர்வுகளுக்கு முன்னதாக மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் துவங்கவுள்ளன. அதன்படி ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி துவங்கும் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இன்று (08-04-2021) முதல் துவங்கும் என மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி மாணவர்கள் விடை எழுதும் முதன்மை தாள்களில், மாணவர்களின் பெயர், வரிசை எண் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும் முகப்பு சீட்டை இணைக்க வேண்டிய பணிகள் இன்று (08-04-2021) முதல் துவங்க உள்ளன.
பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்கள் – பிரதமர் மோடி வழங்கிய அறிவுரைகள்!!
மொழிப்பாடங்களுக்கு 30 பக்கங்களுக்கு கோடிட்ட வெற்றுத்தாள்கள் வழங்கப்படும். உயிரியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களுக்கு ஒரே முகப்பு தாளுடன் முதன்மை தாள்கள் இணைத்து தேர்வெழுத தரப்படும். கணக்குப் பதிவியல் பாடத்துக்கு கட்டங்கள் உள்ள விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கு இந்திய வரைபடத்தாளும், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடங்களுக்கு வரைகட்ட தாள்களும் இணைத்து தரப்படும். இந்த தேர்வுத்தாள்களை இணைக்கும் பணிகளை இன்று (08-04-2021) துவங்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்