தமிழக அரசு பள்ளிகளின் அவல நிலை.. 5,583 பள்ளி கட்டிடங்கள் இடிப்பு ? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள 5,583 அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்து இருப்பதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கட்டிடங்கள்:
தமிழக அரசின் கீழ் மாநிலம் முழுவதும் பல அரசு தொடக்கப்பள்ளிகளும், நடுநிலைப்பள்ளிகளும், உயர்நிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. அந்த பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வி தகுதியும் கட்டமைப்பு வசதியும் கொடுக்க வேண்டும் என அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழை எளிய மக்களின் குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்ற ஆசையில் அரசு பள்ளிகளை தேடி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் மொத்தம் 5,583 அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.
அதனால் இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையை சேர்ந்த சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
உங்க ஊரிலும் நாளை (செப்டம்பர் 23) பவர் கட்டா? – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
அதில் தமிழக அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் 2021-2022 ஆண்டு தமிழகத்தில் 2,553 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது எனவும், 2022-2023 ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது எனவும், தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்க வேண்டும் என அரசிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்