தமிழக பள்ளிகளில் விளையாட்டு மைதானம் & உட்கட்டமைப்பு வசதி? அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!
தமிழகத்தில் 2022 – 2023ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தின் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விளையாட்டு மைதானம்
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. அத்துடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கிடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரி செய்ய 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.
கனமழை காரணமாக பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
இத்திட்டத்தின்படி 2025ம் ஆண்டுக்குள் மாணவர்கள் எண்ணறிவையும் எழுத்தறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்பது இலக்காகும். இத்திட்டத்தின் மூலமாக மாணவர்களின் தனித்திறமைகளையும் வெளிக்கொணர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில பள்ளிகளில் விளையாட்டு மைதானம் கூட இல்லாமல் உள்ளன. ஆனாலும் இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சுபாஷ் சந்திரன் இது தொடர்பாக வழக்கு ஒன்று தொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானம், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளது என்று ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் வசதிகள் அமைத்திட ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.