களைகட்டும் ஐபிஎல் 2021 – பயிற்சியை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற உள்ள நிலையில் துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் தங்களது முதல்கட்ட பயிற்சியை தொடங்கினர்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி:
உலக நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஆனால் போட்டி தொடங்கப்பட்டு சில நாட்களில் பல வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் நீண்ட ஆலோசனைக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து தான் பௌலராக மாறினேன் – மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!
மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்தது. 14-வது ஐபிஎல் சீசனில் இந்தியாவில் 29 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. செப்டம்பரில் துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான போட்டி நடக்கிறது. இதற்கான இறுதிப்போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி துபாயில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் தங்களது முதல்கட்ட பயிற்சியை தொடங்கினர். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தங்களது பயிற்சியை தொடங்கினர். அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் போட்டி இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கும், 2வது போட்டி இரவு 7:30 மணிக்கும் துவங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.