சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளே ஆஃப்களில் நுழைவதற்கான வாய்ப்பு?

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - பிளே ஆஃப்களில் நுழைவதற்கான வாய்ப்பு?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - பிளே ஆஃப்களில் நுழைவதற்கான வாய்ப்பு?
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளே ஆஃப்களில் நுழைவதற்கான வாய்ப்பு?

கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி முதல் நடைபெற்று வரும் IPL 2022 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பிளே ஆஃப்களில் நுழைவதற்கான வாய்ப்பு இன்னும் 3%ல் இருக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் 2022 லீக் கட்டம் முடிவுக்கு வர இன்னும் 15 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் மே 9ம் தேதி நிலவரப்படி இந்த சீசனில் இன்னும் பிளே ஆப்பிற்கு தகுதியாகும் வாய்ப்பு எந்தெந்த அணிகளுக்கு இருக்கிறது என்ற விவரங்கள் தற்சமயம் பெறப்பட்டுள்ளது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் (MI) அணி நிச்சயமாக பிளேஆஃப் இடத்தில் இல்லை. இருப்பினும் கடந்த 2 ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வரும் MI அணி இறுதி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நேற்று (மே.8) நடந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு சிஎஸ்கே மீதமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால், நான்காவது அல்லது மூன்றாவது இடத்தைப் பெற 3.4% வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தின் 10 இடங்களில் இன்ஜினியரிங் படிப்பிற்கான கலந்தாய்வு – அமைச்சர் முக்கிய தகவல்!

இப்போது, KKR அணி முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் நேற்று நடைபெற்ற போட்டிக்குப் பிறகு சிறிது குறைந்து இப்போது 2.9% ஆக உள்ளது. அந்த வகையில், நான்கு முதல் ஏழு அணிகள் பங்கேற்கும் டையில் மூன்றாவது இடத்தில் சேர அவர்களுக்கு 0.2% வாய்ப்பு மட்டுமே உள்ளது. தொடர்ந்து PBKS நான்காவது, மூன்றாவது அல்லது இரண்டாவது இடத்தைப் பெறுவதற்கு 25% வாய்ப்பு உள்ளது. ஆனால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதற்கு சாத்தியமில்லை. மேலும், SRH முதல் நான்கு இடங்களில் ஒன்றில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் 42.5% இலிருந்து 21.2% ஆகக் குறைந்துவிட்டன.

அதே போல CSK அணிக்கு எதிரான DCன் இழப்பு அதன் பிளே ஆப் வாய்ப்புகளை 41.4% இலிருந்து 23% ஆக சரித்துள்ளது. இப்போது ஒரே புள்ளிகள் மற்றும் போட்டிகளின் எண்ணிக்கை இருந்த போதிலும் இரு அணிகளின் வாய்ப்புகளில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் மீதமுள்ள போட்டிகளில் யாரை எதிர்கொள்கிறார்கள் என்பது மற்றும் அதன் இறுதித் தரங்களை பொறுத்து அமையும். அதே வேளையில் RCB SRHக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம் 63% லிருந்து 89.6% புள்ளிகளில் உயர்ந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை மேம்படுத்தியது.

Exams Daily Mobile App Download

நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு, RR முதல் நான்கு இடங்களைப் பெறுவதற்கான அதிக வாய்ப்புகளை 93.8% லிருந்து 95.9% ஆக மேம்படுத்தியுள்ளன. இப்போது, மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் அவர்கள் தோல்வியடைந்தாலும், ஆறாவது இடத்தை பெறலாம். மேலும், GT மற்றும் LSG ஆகிய இரண்டும் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களுக்குள் வருவது உறுதி. எஞ்சியிருக்கும் அனைத்து போட்டிகளிலும் இந்த இரு அணிகளும் தோற்றாலும், நான்காவது இடத்திற்குள் இடம்பெறும் என்பது உறுதியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!