இந்தியாவில் ரயில்வே துறையில் 1.5 லட்சம் பேரை பணியமர்த்த திட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
இந்தியாவில் ரயில்வே துறையில் 1.5 லட்சம் பேரை பணியமர்த்த திட்டம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் ரயில்வே துறையில் 1.5 லட்சம் பேரை பணியமர்த்த திட்டம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் ரயில்வே துறையில் 1.5 லட்சம் பேரை பணியமர்த்த திட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்திய ரயில்வே துறையில் அடுத்த ஆண்டில் 1.5 லட்சம் பேர் பணியமர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்புகள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் தனியார் மற்றும் அரசு துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பொதுத்துறையான ரயில்வே மண்டலம் வாரியாக காலிப்பணியிடங்களை அறிவித்து வருகிறது. அடுத்த ஆண்டில் சுமார் 1.5 லட்சம் பேரை பணியமர்த்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில்வேயில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 43,678 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 2020 மார்ச் 1ம் தேதி நிலவரப்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட பணியில் உள்ள வழக்கமான மத்திய அரசு சிவில் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 31.91 லட்சமாகும்.

Exams Daily Mobile App Download

ரயில்வே, பாதுகாப்பு (சிவில்), உள்துறை, பதவிகள் மற்றும் வருவாய் ஆகிய ஐந்து முக்கிய அமைச்சகங்கள் அல்லது துறைகளின் மூலம் மொத்த மனிதவளத்தில் கிட்டத்தட்ட 92 % உள்ளதாக ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-23 ஆம் ஆண்டின் 1,48,463 பேர் பணியமர்த்தப்படுவார்கள். கடந்த 6 ஆண்டுகளில் 81,000 பணியிடங்களை ஒப்படைப்பதற்கான முன்மொழிவுக்கு எதிராக இந்திய ரயில்வே 72,000 க்கும் மேற்பட்ட பணியிடங்களை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – 11 பேர் பலி! அச்சத்தில் பொதுமக்கள்!

அதனை தொடர்ந்து 16 மண்டல ரயில்வே 2015-16 முதல் 2020-21 வரையிலான நிதியாண்டுகளில் 56,888 தேவையற்ற பதவிகளை ரத்து செய்துள்ளது. தென்கிழக்கு ரயில்வே 4,677 பணியிடங்களை ரத்து செய்துள்ளது. அதே போல தெற்கு ரயில்வேயில் 7,524 பணியிடங்களும், கிழக்கு ரயில்வேயில் 5,700 பணியிடங்களும் நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட பணிகளை தவிர்த்த பிற இடங்களில் அடுத்த ஆண்டு 1.5 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!