தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் திட்டம்?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஊரடங்கு – பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயல்பு நிலை வெகுவாக திரும்பி உள்ளது. எனவே திட்டமிட்டபடி செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன. மறுபுறம் செப்.15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகமாக உள்ளது.
இதனால் மாவட்டங்களில் உள்ள நிலவரத்திற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனிடையே பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் இறையன்பு அவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார். மேலும் செப்.15க்கு பிறகான ஊரடங்கு தளர்வுகள் / கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை செயலர், டிஜிபி, உள்துறை செயலர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசுப் பேருந்துகளில் 18.93 கோடி பெண்கள் இலவச பயணம் – போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்!
இதில் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை தவிர்த்து அடுத்தபடியாக தொடக்க மற்றும் நடுநிலை (1 முதல் 8ம் வகுப்பு வரை) பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இது தொடர்பாக செப்.8ம் தேதிக்கு பின்னர் முடிவெடுக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.