சென்னை மெரினாவில் படகு சேவை அமைக்க திட்டம் – சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்!
தமிழக சட்டப்பேரவையின் மானிய விவாத கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் சென்னை மெரினாவில் படகு சேவை தொடங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை:
தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகஸ்ட் 13ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், தொடர்ந்து தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடந்து வருகின்றது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியான விவாதம் நடந்து வருகின்றது. அதன்படி, இன்று சுற்றுலா துறை மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது.
‘ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்’, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் – குடியரசுத் தலைவர்!
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது தொடர்பாக பலத்திட்டங்களை இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அதன்படி, மக்களின் பயன்பாட்டுக்காக சென்னை மெரினாவில் படகு சேவை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும், மெரீனா கடற்கரையை மேலும் அழகுபடுத்துவதற்காக 10 கோடி ரூபாய் செலவு செய்ய முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்கு சொகுசு கப்பல் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் மின்னும் வகையில் ஒளியூட்ட படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் உள்பட தமிழகத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் சிறப்பாக மேம்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் அறிவித்துள்ளார்.