தமிழகத்தில் கூடுதலாக 1030 முதுகலை ஆசிரியர்களை நிரப்ப திட்டம் – ஆசிரியர் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மொத்தமாக 2,207 காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக 1030 முதுகலை ஆசிரியர்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர்:
தமிழகத்தில் உள்ள ஒன்றிய ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வின் அடிப்படையில் தான் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி இயக்குனர் நிலை – I, கணினி பயிற்றுனர் நிலை – I ஆகிய பணியிடம் குறித்தான விவரங்களை ஆசிரியர் தகுதி வாரியம் கடந்த ஆண்டு வெளியிட்டது.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த பணியிடங்களுக்கான கணினி வழி தேர்வு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரைக்கும் நடைபெற்றது. மேலும், இதற்கான தேர்வு முடிவை ஆசிரியர் தகுதி வாரியம் ஜூலை 4 ஆம் தேதி வெளியிட்டது. இதன் பின்னர், முதுநிலை ஆசிரியர்களுக்கான உத்தேச விடை குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்டது. மேலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி இயக்குனர் நிலை – I, கணினி பயிற்றுனர் நிலை – I ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் புதிய நடைமுறை – அண்ணா பல்கலை அறிவிப்பு
மேலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி இயக்குனர் நிலை – I, கணினி பயிற்றுனர் நிலை – I ஆகிய பணியிடங்களுக்கு மொத்தமாக 2,207 காலிப்பணியிடம் இருப்பதாக ஆசிரியர் தகுதி வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது கூடுதலாக 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனால், மொத்தமாக 3237 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.