ஐடி துறையில் 72,000 பேருக்கு வேலைவாய்ப்பு – டாப் 3 நிறுவனங்கள்!!
இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் மட்டும் 72,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் துவங்கிய போது மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய ஊக்குவித்தது. ஊரடங்கு நிலை தளர்த்தபட்ட போதும் இந்த பணியானது தொடர்ந்து வருகிறது. ஆனால் மறுபக்கத்தில் கொரோனா பாதிப்பின் எதிரொலியாக பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது.
TN Job “FB Group” Join Now
இதனால் வேலை இழந்து பல குடும்பங்கள் கஷ்டத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க கடந்த 2020-2021 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஐடி முக்கியமான நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து ஐடி ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான எவரஸ்ட் குரூப் தெரிவித்த போது, கடந்த நிதியாண்டில் இந்த நிறுவனங்களில் 44 சதவீத வளர்ச்சியுடன் மொத்தம் 72,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வருகை ரத்து – கொரோனா எதிரொலி!!
இதனால் மற்ற தொழில் நிறுவனங்களை போல ஐடி நிறுவனங்களில் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2019-2020 ஆண்டில் இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்து 70,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியுள்ளது. அதாவது டிசிஎஸ் நிறுவனம் 2018-19 ஆம் ஆண்டில் 29,287 பேருக்கும், 2019-20 ஆம் ஆண்டில் 24,179 பேருக்கும், 2020-2021 ஆம் ஆண்டில் 14,826 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் போனஸ் – மாநில அரசு அறிவிப்பு!!
தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் 2018-2019 ஆம் ஆண்டில் 24,016 பேருக்கும், 2019-2020 ஆம் ஆண்டில் 14,248 பேருக்கும், 2020-2021 ஆம் ஆண்டில் 17,248 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. விப்ரோ நிறுவனம் 2018-2019 ஆம் ஆண்டில் 29,287 பேருக்கும், 2019-2020 ஆம் ஆண்டில் 24,179 பேருக்கும், 2020-2021 ஆம் ஆண்டில் 40,005 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை அடுத்த நிதியாண்டில் இன்னும் அதிகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.