சுமார் 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Pinterest நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்!!
Pinterest நிறுவனம் சுமார் 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊழியர்கள் பணி நீக்கம்:
உலகளவில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் தொழில்நுட்ப நிறுவனமான Pinterest சுமார் 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த நடவடிக்கை காரணமாக Pinterest-ன் மொத்த தொழிலாளர்களில் 5% க்கும் குறைவானவர்களையே பாதித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
அதில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாததால் முழுவதும் நம்ப வேண்டாம் என அறிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் மூன்றாம் பாதியில் Pinterest இல் சுமார் 4,000 ஊழியர்கள் பணி புரிந்த நிலையில் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட நிறுவனம் முழுவதும் உள்ள குழுக்களிடமிருந்து வேலை நீக்கம் குறித்த அறிவிப்பு வந்தது. ஆனாலும் இந்த அறிவிப்பால் அனைத்து ஊழியர்களும் பாதிக்கப்படவில்லை.
Amazon.com Inc., Microsoft Corp., Meta Platforms Inc. மற்றும் Google parent Alphabet Inc. ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், அந்த வரிசையில் தொழில்நுட்ப நிறுவனமான Pinterest இணைந்துள்ளது. Pinterest சமீபத்தில் எலியட் நிர்வாகத்தின் ஆர்வலர் முதலீட்டாளர்களின் இலக்காக இருந்தது குறிப்பிடத்தக்கது.