அதிரடியாக 6 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் – Philips நிறுவனம் முடிவு!!
பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Philips சுமார் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட உள்ளது.
பணிநீக்கம் அறிவிப்பு
உலகளவிலான பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களை தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Philips கிட்டத்தட்ட 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதாவது, பிலிப்ஸ் நிறுவனம் அதன் சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சியை சந்தித்த பிறகு இந்த நடவடிக்கைகளில் ஈடுபட இருக்கிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!
இப்போது, பணிநீக்கம் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கை, அந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த ஊழியர்களில் 5 சதவீதத்தை பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிலிப்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ள இந்த பணிநீக்கம் நடப்பு ஆண்டில் பாதியாகவும், மீதமுள்ள பணிநீக்கம் 2025 ஆம் ஆண்டுக்குள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிலிப்ஸ் நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விற்பனையில் 9% ஐ தொடர்ந்து முதலீடு செய்யும் என தெரிவித்துள்ளது.