திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியலாக உள்ள ஜீ தமிழ் சேனலின் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோ தற்போது அதிக வரவேற்பை பெற்று உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
செம்பருத்தி ஷபானா:
கடந்த மாதம் திருமணம் முடிந்துள்ள செம்பருத்தி சீரியலின் நாயகி ஷபானா பற்றி தான் இணையம் முழுவதும் செய்திகள் உள்ளது. இவரது திருமண புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருந்தது. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இவரது போட்டோக்களை வைரலாக்கி வந்தனர். இவர் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், மாவட்ட ஆலோசகர் வேலைவாய்ப்பு – சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இவர்களின் காதல் விஷயத்தை அறிந்து இவர்களின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். மேலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஷபானா ஆர்யன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்த கதையை அனைத்து தரப்பில் இருந்து கேட்டு வருகின்றனர். அது பற்றி இன்னும் சமூகவலைப்பக்கங்களில் தெரிவிக்காமல் அமைதியாக, அவர்களின் திருமண வாழ்வை ரசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஷபானா மற்றும் ஆர்யன் பற்றி வதந்திகள் பரவி வந்தது.
தினமும் ரூ.2 முதலீடு செய்தால் வருடம் ரூ.36,000 வரை ஓய்வூதியம் – PM SYM திட்டத்தின் அம்சங்கள்!
அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தங்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டனர். அதன்பிறகு, தான் வதந்திகள் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், செம்பருத்தி சீரியலில் ஷாபனாவுடன் நடிக்கும் தீப்தி உடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஷபானா மற்றும் தீப்தி இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகள். அடிக்கடி இவர்கள் சேர்ந்து பல போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு ஷபானா தனது தோழியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது அதிக லைக்குகளை பெற்று வருகிறது.