தமிழகத்தில் போட்டோ, ஸ்டுடியோ நிறுவனங்கள் மீண்டும் திறப்பு – சங்க நிர்வாகிகள் கோரிக்கை!!
தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் ஸ்டுடியோ, கலர் லேப், வீடியோ, போட்டோ தொழில் நிறுவனங்கள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்க தலைவர் நிக்சன் சகாயராஜ் தலைமையில் நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
போட்டோ, ஸ்டுடியோ நிறுவனங்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த மாதம் மே மாதம் முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டது. ஆனாலும் நோய் பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வந்தது. தடுப்பு நடவடிக்கையாக அரசு மேலும் ஊரடங்கை நீட்டித்தது. தளர்வுகள் ஏதும் இன்றி முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் ஓரளவு குறைந்தது.
செப்டம்பர் மாதம் முதல் குழந்தைகளுக்கான Sputnik V தடுப்பூசி – ரஷ்யா சோதனை!
மேலும் மாநிலம் தோறும் 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மக்கள் கொரோனாவிலிருந்து காத்து கொள்ள 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்கின்றனர். இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சுய தொழில் செய்பவர்கள் இ பதிவு பெற்று தொழிலை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காய்கறி மளிகை போன்ற கடை திறக்கப்பட்டது, முடி திருத்தும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் ஸ்டுடியோ, கலர் லேப், வீடியோ, போட்டோ தொழில் நிறுவனங்கள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்க தலைவர் நிக்சன் சகாயராஜ் தலைமையில் நிர்வாகிகள் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த கடைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு வாய்ப்பு கிடையாது கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து வீடியோ, போட்டோ தொடர்பான கடைகள் திறந்து தொழில் நடத்த அனுமதி பெற்று தரும்படி மனுவில் தெரிவித்துள்ளனர்.