ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஒரு நிமிடத்தில் போன் நம்பரை கண்டறியலாம்!
தனி நபரின் ஆதாருடன் இணைந்துள்ள போன் நம்பரை ஒரு நிமிடத்தில் கண்டறியும் முறையை தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.
கண்டறியும் முறை:
மத்திய அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஆதார் கார்டு தனிநபரின் முழு அடையாளமாக உள்ளது. இதில் ஒரு நபரின் கை ரேகை, கண் விழித்திரை, உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் உள்ளன. அதனால் தான் இதை வேறு நபர்களிடம் பகிரக் கூடாது என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதோடு மட்டுமல்லாமல், வங்கி கணக்கு, பாஸ்போர்ட் போன்ற அனைத்து அரசு சார்ந்த ஆவணங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் கார்டை பெறுவது அனைத்து மக்களின் அவசியமாக உள்ளது.
மதுரையில் இன்று ‘நிழலில்லா நாள்’ – கலிலியோ அறிவியல் மைய இயக்குநர் தகவல்!
இந்த நிலையில், ஆதார் கார்டுடன் அவரவர் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் இந்தியா சார்ந்த திட்டமாகவும், அவர்களது ஆதார் குறித்த தகவல்களை மொபைல் போனில் பார்ப்பதற்காகவும் இந்த செயல் நடைமுறையில் உள்ளது. அதிகபட்சமாக ஒரு நபர் அரசாங்கத்தின் தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, தனது பெயரில் அதிகபட்சம் ஒன்பது மொபைல் இணைப்புகளை பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், தனிநபரின் ஆதார் அட்டை யாராலும் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தொலைத்தொடர்புத் துறை தங்களது இணையதள பக்கத்தில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அது என்னவெனில் இந்த புதிய சேவையின் மூலம், உங்கள் ஆதார் எண்ணுடன் எத்தனை மொபைல் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் எளிதாக சரிபார்க்கலாம். இதற்கான இணையப்பக்கத்தில் சென்று உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்தால், உங்கள் போனுக்கு ஓடிபி வரும். அதை உள்ளீடு செய்தால் அந்த பக்கம் ஓபனாகி உங்கள் மொபைல் எண் குறித்த விவரங்கள் தோன்றும். இதையடுத்து உங்களுக்கு தேவையில்லாத அல்லது உபயோகத்தில் இல்லாத எண்ணை பிளாக் செய்து விடலாம் என்ற வழிமுறைகள் அனைத்தையும் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.