இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கு தடை நீக்கம் – பிலிப்பைன்ஸ் அரசு!
கொரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்து பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்திருந்தது. தற்போது அந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
தடை நீக்கம்:
2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் அலை என தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய்த்தொற்றின் தாக்கத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் விமான சேவை உள்ளிட்டவை நிறுத்தப்பட்டது.
Tokyo Paralympics பேட்மிண்டன் – வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் மனோஜ் சர்கார்!
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் விமான சேவை செயல்பட்டு வருகிறது. உலக நாடுகளிடையே கொரோனா குறித்த அச்சம் அதிகமாக இருந்ததால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பிலிப்பின்ஸ் அரசு இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு இரு பருவத்தேர்வுகள் முறை – கல்வி இயக்குனரகம்!
தற்போது அந்த அறிவிப்பினை ரத்து செய்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,310 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் செப்டம்பர் 6 ஆம் தேதி அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டு உள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.