அக்.16 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் அமல் – பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவு!

0
அக்.16 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் அமல் - பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவு!
அக்.16 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் அமல் - பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவு!
அக்.16 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் அமல் – பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவு!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் நாளை (அக்டோபர் 16) முதல் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொது நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட திறன்களில் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலவி வரும் கொரோனா பேரலை காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை (அக்டோபர் 16) முதல் தளர்த்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக அந்நாட்டின் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஹாரி ரோக் கூறுகையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் நாளை (அக்.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அந்த வகையில் சில நிறுவனங்களின் செயல்பாடுகளை அதிகபட்சமாக 30 சதவிகித உட்புற திறன் மற்றும் 50 சதவிகித வெளிப்புற திறனில் செயல்பட அனுமதித்துள்ளது. அதே நேரத்தில் அனைத்து தொழிலாளர்கள் அல்லது பணியாளர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே அலுவலகங்கள் திறக்கப்படலாம் என வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுகின்றன. அத்துடன் விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் இறுதி சடங்குகள் போன்ற தனிப்பட்ட மதக் கூட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அக்.16 முதல் 19 வரை தொடர் வங்கி விடுமுறைகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தவிர அனுமதிக்கப்பட்ட கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள், திருமணங்கள், பிறந்த நாள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெறும் இடங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், பொதுத் தோட்டங்கள் மற்றும் இயற்கை காட்சிகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேலும் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மணிலாவில் வசிப்பவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,181 புதிய நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!