2ம் கட்ட சென்னை மெட்ரோ திட்டத்தில் ரூ.163.31 கோடி ஒப்பந்தம் – தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள்!
சென்னை மெட்ரோ ரயிலுக்கான 2ம் கட்ட பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தற்போது தண்டவாளங்கள் அமைக்கும் பணிக்காக ரூ.163.31 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
2ம் கட்ட மெட்ரோ திட்டம்:
சென்னையில் மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மொத்தம் 5 வழித்தடங்களில் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் உள்ளது. 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்காக மத்திய அரசு ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் திட்டம் வடிவமைத்துள்ளது. மொத்தம் 118.9 கி.மீ. தொலைவிற்கு இத்திட்டத்தின் மூலம் மெட்ரோ ரயில்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தமிழகத்தில் மக்களுக்காக புதிய இணையதளம் அறிமுகம் – மாநகராட்சி ஆணையாளர் தகவல்!
அதில், 3ம் வழித்தடமான மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை மொத்தம் உள்ள 45.8 கி.மீ. மற்றும் 5ம் வழித்தடமான மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவிற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட வேண்டும். 2025ம் ஆண்டிற்குள் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் அனைத்தும் முடிவடைந்து, செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பானை சேர்ந்த மிட்சுயி அன்ட் கோ நிறுவனத்திற்கு 3 மற்றும் 5 ம் வழித்தடத்தில் தண்டவாளங்களை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை தற்போது ரூ.163.31 கோடியில் மெட்ரோ நிர்வாகம் வழங்கியுள்ளது.TNPSC Online Classes