தமிழகத்தில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் – 26 ரயில்களை இயக்க ஒப்பந்தம்!
தமிழகத்தில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநர் இன்றி 26 மெட்ரோ ரயில்களை இயக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மெட்ரோ ரயில்கள்:
சென்னையில் முதற்கட்டமாக மெட்ரோ ரயில் நடைமுறைக்கு வந்துள்ளது. இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில், 25 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் படி மாதவரம் – சோழிங்கநல்லுார், மாதவரம் – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பை — பாஸ் வரை, மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கு முன்னதாக டெல்லியில் ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்த போது நாட்டின் பிற நகரங்களிலும், தானியங்கி மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார். அதன் படி சென்னையில் இரண்டாவது திட்டத்தில், ஓட்டுனர் இல்லா 26 தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்க தற்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒட்டுநர் இன்றி இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை இயக்க ரூ.946.92 கோடியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் நான்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஆனால் இரண்டாவது திட்டத்தில் முதல் கட்டமாக மூன்று பெட்டிகளுடனும் பயணிகளின் வருகையை பொறுத்து ஆறு பெட்டிகளுடனும் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரயில் நிலையங்கள் 6 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் சேவை உலக தரத்திற்கு உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்திய குக்ராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்பட்ட மேலை நாடுகளுக்குச் சமமாக மேம்படவேண்டும் ! தனிமனித வாழ்கை மேலை நாட்டினருக்கு சமமாகட்டும்💐