தமிழகத்தில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் – ஓட்டுநர் இல்லா ரயில்கள் தயாரிக்க ஒப்பந்தம்!
தமிழகத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 26 ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ரயில்கள் தயாரிக்கும் பணியில் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் என்ற இந்தியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் இல்லா ரயில்:
சென்னையில் முதற்கட்டமாக மெட்ரோ ரயில் நடைமுறைக்கு வந்துள்ளது. இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இன்றி தானியங்கி முறையில், 25 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டது. இது குறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார். தற்போது சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து, இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
WhatsApp பயனர்களுக்கான ஷாக் நியூஸ் – விரைவில் பிரீமியம் கட்டணம்!
அதன் பின் இரண்டாம் கட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம், சுமார் 63,200 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதற்காக ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்கு பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்கல் மற்றும் குறைபாடு பொறுப்பு போன்றவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓட்டுநர் இல்லா ரயில் தயாராகி 2024 ஆம் ஆண்டு முதல் ரயில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதன் பின் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்துக்கான சோதனைகள் நடத்தப்படும். அதன் பின் மற்ற ரயில்கள் ஒரு ஆண்டிற்குள் பல்வேறு கட்டமாக மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த ஒப்பந்தத்துக்கான மொத்த கால அளவு 40 மாதங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.