PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு.!
முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியாகிய அறிவிப்பில், Senior Research Fellow பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Pharmacology / Life Sciences பாடப்பிரிவில் Masters டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET / GATE தேர்வுகளில் தேர்ச்சி ஆனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
- விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட Preclinical research, Immunohistochemistry, HPLC போன்றவற்றில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Small Animals and molecular biology techniques களில் முன் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் பணியின்போது DST அமைப்பின் ஊதிய விதிமுறைகளின் படி பணிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் மற்றும் HRA பெறுவார்கள். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றாற்போல் Shortlist செய்யப்பட்ட பின், நேரடியாக நேர்முகத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.