பவர்கிரிட் ஆணையத்தில் (PGCIL) 140+ காலிப்பணியிடங்கள் – ITI, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) |
பணியின் பெயர் | Trade Apprentice |
பணியிடங்கள் | 145 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
PGCIL பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Trade Apprentice பணிக்கென 145 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
PGCIL கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI, Diploma , B.E./ B.Tech./ B.Sc.(Engg.), MBA (HR)/ Post Graduate என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
PGCIL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப் பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
PGCIL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Electrician – ரூ. 11,000/-
- Diploma (Electrical), Diploma (Civil) – ரூ. 12,000/-
- Graduate, HR Executive, CSR Executive – ரூ.15,000/-
PGCIL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப் பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப் பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 31.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.07.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.