மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை – 70+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்…!
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிருவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Field Engineer, Field Supervisor பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Field Engineer, Field Supervisor பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் 75 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய Electrical / Electrical (Power) / Electrical and Electronics / Power Systems Engineering / Power Engineering (Electrical) / Civil Engineering பாடப்பிரிவில் Diploma, BE / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
- 01.06.2022 அன்றைய தேதியின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாதம் குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரையும் ஊதியம் பெறுவார்கள்.
- SC / ST / PWD / Ex-SM / DEx-SM / Departmental விண்ணப்பதாரர்களை தவிர மற்ற அனைத்து வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு Field Supervisor (Electrical/ Civil) பணிக்கு ரூ.300/- என்றும், Field Engineer (Electrical/ Civil) பணிக்கு ரூ.400/- என்றும் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் Screening Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 1.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.