PGCIL வேலைவாய்ப்பு – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Power Grid Corporation of India (PGCIL) நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் Diploma Trainee (Civil/Electrical) பணியிடம் Ladakh and Kashmir ஆகிய இடங்களில் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என மொத்தமாக 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 20.4.2022 இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Power Grid Corporation of India (PGCIL) |
பணியின் பெயர் | Diploma Trainee (Civil/Electrical) |
பணியிடங்கள் | 16 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Diploma Trainee காலிப்பணியிடம்:
Power Grid Corporation of India (PGCIL) நிறுவனத்தில் 16 காலிப்பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.
- Diploma Trainee (Electrical) : Ladakh – 9
- Diploma Trainee (Civil) : Ladakh – 2
- Diploma Trainee (Electrical) : Kashmir – 5
Diploma Trainee கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர் 3 வருடம் Diploma படிப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
- 70% மொத்த மதிப்பெண் சதவீதம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Discipline: Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical) OR Civil Engineering
PGCIL வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 20.4.2022 நாள் கணக்கின்படி UR/EWS பிரிவினராக இருந்தால் 27 வயதிற்குட்பட்டவராகவும், SC/ST பிரிவினராக இருந்தால் 32 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
PGCIL ஊதியம்:
விண்ணப்பதாரர் ரூ. 25,000/- முதல் ரூ.1,17,500/- வரை ஊதியமாக பெறுவார்கள்.
PGCIL தேர்வு செய்யப்படும் விதம்:
இந்த பணிக்கு விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
PGCIL விண்ணப்பக்கட்டணம்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ. 300/- விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PwD/Ex-SM பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
PGCIL விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று விண்ணப்பிக்கவும். 20.4.2022 இறுதி நாளுக்குள் விண்ணப்பதாரர் தனது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இறுதி நாளுக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.