பவர்கிரிட் ஆணையத்தில் (PGCIL) 100+ காலிப்பணியிடங்கள் – B.E/ B.Tech தேர்ச்சி || மாத ஊதியம்: ரூ.1,60,000/-
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Engineer Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) |
பணியின் பெயர் | Assistant Engineer Trainee |
பணியிடங்கள் | 105 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
PGCIL காலிப்பணியிடங்கள் :
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Engineer Trainee பணிக்கென 105 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Computer Science – 37 பணியிடங்கள்
- Electrical – 60 பணியிடங்கள்
- Civil – 04 பணியிடங்கள்
- Electronics – 04 பணியிடங்கள்
PGCIL கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech/ B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
PGCIL வயது வரம்பு:
31.12.2021ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
PGCIL ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு ஆண்டு கால training- ல் ஊதியமாக ரூ.1,40,000/- வழங்கப்படும் என்றும் Training முடிந்த பின் மாத ஊதியமாக ரூ.1,60,000/- வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PGCIL தேர்வு செய்யப்படும் முறை:
Assistant Engineer Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் GATE 2021 Score, Behavioral Assessment, Group Discussion மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PGCIL விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PwD/ Ex-SM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
மற்றவர்கள்: ரூ. 500/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 20.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.