தமிழகத்தில் PG TRB முதுகலை ஆசிரியர் தேர்வு தள்ளிவைப்பு? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான, இரண்டாம் கட்ட போட்டி தேர்வு 16 முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் மத்தியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் தேர்வை நடத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு தள்ளிவைப்பு:
தமிழகத்தில் கொரோனா எழுச்சி குறைத்து வருவதால், ஊடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா கால கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை- 1, கணினி பயிற்றுநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்க்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக போட்டி தேர்வு நடத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
பிப்ரவரி 11 வரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த அடிப்படையில் முதல் கட்ட தேர்வுக்கான கால அட்டவணை கடந்த மாதம் வெளியானது. இந்த வகையில் தமிழ் உள்ளிட்ட 14 பாடங்களுக்கு வரும், 12 முதல் 15 ம் தேதி வரையில் தேர்வுகள் நடத்தப்படும் என கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியானது. அந்த கால அட்டவணையில் வரும், 16 முதல் 20 ம் தேதி வரை மற்ற பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. மேலும் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
தமிழக அரசு ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிறப்பு அனுமதி விபரங்கள்!
இந்த அடிப்படையில் தேர்தல் பணிக்கு, இந்த ஆசிரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 17ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை அதற்கான பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்பு , ஆசிரியர் இரண்டாம் கட்ட தேர்வை நடத்துமாறு, தேர்வர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.