மே 2 வரை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து – முதன்மை செயலர் அறிவிப்பு!

0
மே 2 வரை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து - முதன்மை செயலர் அறிவிப்பு!
மே 2 வரை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து - முதன்மை செயலர் அறிவிப்பு!
மே 2 வரை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் ரத்து – முதன்மை செயலர் அறிவிப்பு!

ஒடிசா மாநிலத்தில் வெப்பச்சலனம் அதிகமாக இருந்து வரும் காரணத்தினால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு வகுப்புகள் ஏப்ரல் 27 முதல் மே 2 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பள்ளி, கல்லூரி விடுமுறை:

கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு இந்தியாவில் வெப்பச்சலனம் சற்று கூடுதலாகவே இருந்து வருகிறது. கூடுதல் வெப்ப சலனத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பத்தின் அளவு கூடுதலாக இருக்கிறது. எப்போதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து தேர்வுகளும் முடித்துவிட்டு கோடை விடுமுறை விடப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்புகள்!

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடத்திட்டங்களை நடத்துவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மாணவர்களும் தற்போது பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கூடுதல் வெப்ப சலனத்தின் காரணமாக மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் நாளை முதல் மே 2 வரை அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு வகுப்புகள் ரத்து செய்யப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மாணவர்களுக்கு ஏதேனும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதிப்பீடு, நிர்வாகப் பணிகள், ஆராய்ச்சி பணிகள் போன்ற செயல்பாடுகள் வழக்கம்போல தொடரும் என உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா கால கட்டத்தில் இழந்த கல்வியை ஈடுகட்ட ஜூன் 1 முதல் ஜூன் 16ஆம் தேதி வரை மட்டுமே ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பொதுக்குழு பல்கலைக்கழகங்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!