PF பென்ஷன் தொகை உயர்வு – ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மூலம் லட்சக்கணக்கான பணியாளர்கள், பென்ஷன் தொகையை சேமித்து வருகின்றனர். மேலும் பென்ஷன் தொகையை உயர்த்தி தருமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. இந்த நிலையில் விரைவில் பென்ஷன் தொகை அதிகரிப்பு செய்தி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பென்ஷன் தொகை உயர்வு:
இந்தியாவில் ஊழியர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகை வட்டியுடன் அளிக்கப்படுகின்றன. இதற்கு ஊழியர்கள் அவர்கள் பணியாற்றும் காலத்தின்போது, மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2ம் பருவ தேர்வு குறித்த தகவல்கள்!
இந்நிலையில் நடப்பு ஆண்டு ஊழியர்களின் பென்ஷன் தொகையை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையில் பென்ஷன் தொகை ஊழியர்களின் அடிப்படை சம்பள தொகையை வைத்து கணக்கிடப்படுகிறது. இந்த கணக்கீட்டிற்கு வரம்பு உள்ளன. இந்நிலையில் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15000 ஆக இருந்தால், அவர்களுக்கு பென்ஷன் தொகை இதுவரை ரூ.15000 லிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது.
பிப்ரவரி 20 வரை மீண்டும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்த வரம்பு காரணமாக ஊழியர்களுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் 50000 ரூபாயாக இருந்தாலும் அதற்கான பென்ஷன் தொகை ரூ.15000 லிருந்து கணக்கிடப்படுகிறது. இந்த வரம்பை உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அடிப்படை சம்பள வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கினால் ஊழியர்களுக்கு பல மடங்கு பென்ஷன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.