PF சலுகை 2021 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு – மத்திய நிதி அமைச்சகம்!
மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பி.எஃப். சலுகை கொரோனா காரணமாக நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
PF சலுகை:
கெரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தை சரிசெய்ய மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டமே ஆத்ம நிர்பார் பாரத் ஆகும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் ஆகும். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த 6 வங்கி வாடிக்கையாளர்களுக்கு EPFO முக்கிய அறிவிப்பு – IFSC கோட் புதுப்பிப்பு!
அதில், மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு பி.எஃப். சலுகை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக புதிதாக பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி, ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் அல்லது அதற்கு கீழாக இருந்தால் பணியாளர்கள் பங்களிப்பாக 12 சதவீதம், நிறுவனத்தின் பங்களிப்பாக 12 சதவீதம் என 24 சதவீதம் 2 ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
மேலும் 1000க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் பணியாளர்கள் பங்களிப்பான 12 சதவீதம் மட்டும் வழங்கப்படும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 80 ஆயிரம் நிறுவனங்களைச் சேர்ந்த 21 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.