PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மத்திய அரசின் திட்டம் மார்ச் இறுதி வரை நீட்டிப்பு!
இந்தியாவில் ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனா வேலைவாய்ப்பு திட்டம் 2022 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 71.8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎப் :
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தனர். ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும் தொழில் சரிவினாலும் இதனால் வேலை கிடைப்பது மக்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், நாட்டு மக்களின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், வேலைவாய்ப்புகளை உயர்த்தவும் மத்திய அரசு ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனா வேலைவாய்ப்புத் திட்டத்தை கொண்டு வந்ததது.
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? அடுத்து செய்ய வேண்டியது என்ன? தவறாமல் படிங்க!
இந்த திட்டம் 2020 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நோக்கில் செயல்பாடுகளை மேற்கொண்டது. அந்த வகையில் புதிய ஊழியர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மத்திய அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 1000 பேர் பணிபுரியும் நிறுவனத்தில் நிறுவனத்தில் புதிய ஊழியர்களுக்கான சம்பளத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் 12 சதவீதமும், நிறுவனத்தின் பங்களிப்பில் 12% சேர்த்து 24 % பங்களிப்பு தொகை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் வரவு வைக்கப்படும்.
தேசிய போக்குவரத்துக் கழகத்தில் ரூ.2,24,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!
ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் திட்டம் ஏற்கனவே 2021 ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மகிழ்ச்சியான செய்தியாக 2022 மார்ச் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 71.8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் திட்டத்தால் 2021 ஜூன் 18ஆம் தேதி வரையில் சுமார் 21.42 லட்சம் பேர் வேலை வாய்ப்பு மற்றும் பிஎப் தொகை பெற்று பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்காக அரசு சார்பில் ரூ.902 கோடி ரூபாயை செலவிடப்பட்டுள்ளது.